சென்னையில் 21ம்தேதி நடக்கிறது கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கொங்குமண்டல திமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வரும் 21ம்தேதி நடக்கிறது என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய திமுக மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட,ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம், வரும் 21ம்தேதி  புதன்கிழமை, காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.அப்போது, மேற்குறிப்பிட்டுள்ள செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: