புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. கொரோனா பரவலால் தொழில்துறைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், விவசாயம் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுத்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் டிராக்டர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,16,185 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது, இந்த ஆண்டில் முதல் முறையாக 1 லட்சம் எண்ணிக்கையை தாண்டி விற்பனையாகியுள்ளது.