புதுடெல்லி: திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தாத பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் -1986, பிரிவு 5ன் படி விளக்கம் கேட்டும், மூடுவதற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தச் சட்ட விதிகள் 2018ன் படி, சட்ட விதிகளை பின்பற்றாத இந்த நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவை இந்த வாரியத்தில் பதிவு செய்யப்படாததோடு, நோட்டீசுக்கு விளக்கம் தரவில்லை.