அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலாளியை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் கடந்த சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இரவு நேரங்களில் பேருந்து கிடைக்காதவர்கள் மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்குவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு வந்த மாற்றுத்திறனாளி மணி (32), பேருந்து நிலைய வளாகத்தில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.