சென்னை: கோவையை சேர்ந்தவர் சந்திரன் (62). இவர், கடந்த 15 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, சினிமா புரொடக்ஷன் ஏஜென்டாக இருந்து வந்தார். கொரோனா காரணமாக அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சொந்த ஊரான கோவைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சமையல் செய்ய வீட்டில் உள்ள அடுப்பை சந்திரன் பற்றவைத்தார். ஏற்கனவே வீடு முழுவதும் காஸ் கசிந்து இருப்பதை கவனிக்காமல் அடுப்பை பற்றவைத்த போது, திடீரென தீவிபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.