டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சம் பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தற்போதையை சூழல் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாட்டில் தற்போது உள்ள கொரோனா சூழல் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது 62 லட்சத்தை கடந்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.