விழுப்புரம்: மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு சென்னை அழைத்து வரப்படுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார். தமிழகமுதல்வரின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.