கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(55). பட்டியல் இனத்தை சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் தொழிலாளி. இதே ஊர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் சிவசங்கு(60). இவரும் ஆடுகள் வளர்த்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கு காலில் விழுந்து பால்ராஜ் மன்னிப்பு கேட்பது போன்றும், அவருக்கு சிவசங்கு தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து துரத்துவது போன்றும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமாரிடம் பால்ராஜ் புகார் அளித்தார். அதன்படி கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தெரியவந்ததாவது: பால்ராஜ், சிவசங்கு இருவரும் சில மாதங்களுக்கு முன் ஒரே இடத்தில் ஆடு மேய்த்ததில் வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.