அச்சிறுப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத ஆண் எரித்து கொலை ? போலீசார் தீவிர விசாரணை

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே சுடுகாட்டில் பாதி எரிந்தநிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சிறுப்பாக்கம் அடுத்த தின்னனூரில் சிலர் வழக்கம்போல், தங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நேற்று வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது குறித்து அவர்கள் ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, லுங்கியும் சட்டையும் அணிந்த, ஆண் உடலின் பெரும்பகுதி எரிந்தநிலையில் காணப்பட்டது.

அவருக்கு, சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. பின்னர், காஞ்சிபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது, அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து ஓரத்தி-திண்டிவனம் சாலையில் சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. இறந்த நபரை வேறு பகுதியில் கொலை செய்து இங்கு கொண்டு வந்தது அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து இருக்கலாம். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் காவல் நிலையங்களில் யாராவது காணாமல் போன வழக்கு பதிவாகியுள்ளதா என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: