டிரம்ப்புக்கு கோயில் கட்டியவர் மாரடைப்பால் பலி

திருமலை: தெலங்கானா மாநிலம், ஜனகாம்மா மாவட்டம், பட்சன்னபேட்டை அடுத்த கோனே கிராமத்தை சேர்ந்தவர் புசா கிருஷ்ணா(45). இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகர். இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்புக்கு 6 அடி உயர சிலை வைத்து தினமும் வழிபட தொடங்கினார். இந்நிலையில், டிரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையறிந்த கிருஷ்ணா, மிகுந்த வருத்தமடைந்துள்ளார். டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளை வணங்கி வந்தார். டிரம்பிற்கு தொற்று ஏற்பட்டது முதல் சரியாக உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார். நேற்று புசா கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணா இறந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: