ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் துறையில், தொழில்நுட்ப பிரிவு (டெக்னிக்கல்) ஒன்று இயங்கி வருகிறது. இதன் முக்கிய பணியே வாக்கிடாக்கியை பராமரிப்பதும், ஆன்லைன் எப்.ஐ.ஆர். (சிசிடிஎன்எஸ்) போன்ற பணிகளை மேற்கொள்வதுமே ஆகும். அந்த வகையில், ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில், உயர் அதிகாரி ஒருவர், சில மாதங்களாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.க்களிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியும், சில்மிஷத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கள் வாய்மொழியாக ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.