பெய்ஜிங் : உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியது என்ற தகவலை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகாண் நகரத்தில் இருந்து வெடித்து கிளம்பிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்று வெளிப்படையாகவே சாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.