இன்று 88-வது தேசிய விமானப்படை தினம்: மனிதகுல சேவையில் முக்கிய பங்கு...குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் புகழாரம்.!!!

டெல்லி: தேசிய விமானப்படை தினத்தையொட்டி, விமானப்படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இந்திய விமானப் படை, உலக அளவில்  சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது.  அவ்வகையில் இன்று 88-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புகழாரம் சூட்டியுள்ளனர்.

குடியரசுத்தலைவர் வாழ்த்து:

விமானப்படை தினத்தன்று, எங்கள் விமான வீரர்கள், வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படையின் குடும்பங்களை பெருமையுடன் மதிக்கிறோம். நமது வானத்தை பாதுகாப்பதிலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணத்தில் சிவில்  அதிகாரிகளுக்கு உதவுவதிலும் ஐ.ஏ.எஃப் பங்களித்ததற்கு நாடு கடன்பட்டிருக்கிறது. ரஃபேல், அப்பாச்சி மற்றும் சினூக் ஆகியவற்றின் தூண்டுதலுடன் நவீனமயமாக்கலின் தற்போதைய செயல்முறை IAF ஐ இன்னும் வலிமையான மூலோபாய  சக்தியாக மாற்றும். அடுத்த ஆண்டுகளில், இந்திய விமானப்படை அதன் உயர் தர அர்ப்பணிப்பு மற்றும் திறனை தொடர்ந்து பராமரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

விமானப்படை தினத்தன்று இந்திய விமானப்படையின் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நாட்டின் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு  வகிக்கிறீர்கள். மா பாரதியைப் பாதுகாப்பதற்கான உங்கள் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் வாழ்த்து:

தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளை எண்ணி நாடே  பெருமைக்கொள்கிறது. நவீனமயமாக்குவதன் மூலம் விமானப்படை திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம். நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறது. 88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான  சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமித்ஷா வாழ்த்து:

இந்திய விமானப்படை தின வாழ்த்துக்கள்! எங்கள் வானத்தை பாதுகாப்பதில் இருந்து அனைத்து முரண்பாடுகளிலும் உதவுவது வரை, எங்கள் துணிச்சலான விமானப்படை வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் தேசத்திற்கு சேவை  செய்துள்ளனர். எங்கள் வலிமைமிக்க விமான வீரர்களை வானத்தில் சத்தமாக அலற வைக்க மோடி அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: