தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நரம்பியல் இதயம், எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, முழு உடல் பரிசோதனை கூடம், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் எப்போதும் இந்த மருத்துவமனை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், மருத்துவமனை நுழைவாயிலில் மருத்துவர்களின் கார், நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் ஆகியவை செல்லமுடியாமல் வழியிலேயே கடைகளை நடத்தி வருகின்றனர்.