சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை காப்பாற்றி, அவருக்கு 80வது பிறந்தநாளை கிண்டி கிங் மருத்துவமனை மருத்துவர்கள் கொண்டாடி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சென்னை, கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் மற்றும் உயிர்காக்கும் மருந்து வாயிலாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக, ஒரு வாரத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.