கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு 80வது பிறந்தநாள்: கிங் மருத்துவமனையில் கொண்டாட்டம்

சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை காப்பாற்றி, அவருக்கு 80வது பிறந்தநாளை கிண்டி கிங் மருத்துவமனை மருத்துவர்கள் கொண்டாடி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சென்னை, கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் மற்றும் உயிர்காக்கும் மருந்து வாயிலாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக, ஒரு வாரத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, அவரது, 80வது பிறந்த நாளை நேற்று மருத்துவமனையில் மருத்துவர்கள் கொண்டாடினர். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி கூறியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அப்போது, கிருஷ்ணன் என்பவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து, நோயாளிகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடினோம். இதுபோன்ற நிகழ்வு, மற்ற நோயாளிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: