சேலம் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவரான 68 வயது அதிமுக நிர்வாகி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.    

பள்ளப்பட்டியை சேர்ந்த 49 வயதான நபர், 25ம் தேதி ெகாரோனா பாதிப்பிற்கு ஆளாகி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 50 வயதான நபர், கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவர்களது உடல்கள் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: