சென்னை: வீடியோ கான்பரன்ஸ் மூலம் லோக் அதாலத் நடத்தி 4,468 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 83 கோடியே 6 லட்சத்து 71,704 பைசல் செய்து சட்டப் பணிகள் ஆணையம் புதிய சாதனையை படைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் லோக் அதாலத் மூலம் தீர்த்து வைக்கக்கூடிய வழக்குகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை தேசிய அளவிலான லோக் அதாலத்துக்களை நடத்த தேசிய சட்டப் பணிகள் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து மாநிலங்களிலும் தேசிய லோக் அதாலத்துகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தமிழகத்தில் நேற்று லோக் அதாலத் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக லோக் அதாலத்தை நேரடியாக நடத்த முடியாத காரணத்தால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.