சென்னை: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமத்திற்கு கடந்த ஜூலை மாதம் திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குவைத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 29ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.