புதுடெல்லி, :வரும் 16ம் தேதி முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை மத்திய நிதி அமைச்சகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலத்தில், 2017 பிப். 1ம் தேதி முதல்முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி பதவிக்காலம் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் மூன்றாவது மத்திய பட்ஜெட் (இடைக்கால பட்ஜெட் உட்பட) தயாரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதியான தகவல்களை வெளியிட்டுள்ளன.