சென்னை: சென்னை மணலி புதுநகர் அய்யா கோயிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மணலி புதுநகர் அய்யா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா, திரு ஏடு வாசிப்பு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்குகள் முழங்க அய்யா சிவ சிவ அரகரா அரகரா என அய்யா வழி பக்தர்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.