சென்னை: பெரியபாளையம் பவானியம்மன், சிறுவாபுரி முருகன் கோயில்களில் துணை முதல்வர் நேற்று சிறப்பு தரிசனம் செய்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி தற்போது நிலவி வருகிறது. அதனால், முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து வருகிறார். மேலும், அவரது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகிறார்.