சென்னை: நாளை காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளை (2ம் தேதி) காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில், அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். கூட்டம் நடைபெறுவது குறித்து கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
நாளை காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
- சந்தித்தல்
- கிராம நிலாதாரி சபை
- கிராம பஞ்சாயத்துகள்
- காந்தி ஜெயந்தி
- மாவட்ட சேகரிப்பாளர்கள்
- தமிழ்நாடு அரசு