களியக்காவிளை: கேரளாவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் சந்தீப் நாயர் என்பவரை 2வது குற்றவாளியாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சேர்த்துள்ளது. பெங்களூருவில் முதல் குற்றவாளியான சொப்னாவுடன் இவரும் கைது செய்யப்பட்டார். இன்னொரு குற்றவாளியான ரமீஸ் என்பவருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ரமீஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். சந்தீப் நாயர் மூலம் தங்கம் வாங்கிய ரமீஸ், அதை விற்பதால் கிடைத்த பணத்தை தீவிரவாத இயக்கத்தினருக்கு கொடுத்ததாக என்ஐஏ குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை குறிப்பிட்டு சொல்லும் வகையில் என்ஐஏ.வுக்கு முக்கிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.