சென்னை: சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து வெளியூருக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி பார்த்திபன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அந்த பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்த பார்சல்களை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது.