சென்னை: நில அபகரிப்பு செய்ததாக தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால் என்பவருக்கு சொந்தமாக சோழிங்கநல்லூரில் உள்ள நிலத்தை அபகரித்ததாக, தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி, அவரது மனைவி, மகள் மீது வழக்குப்பதியப்பட்டது. இதையடுத்து, 2019ல் துக்கையாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சரியாக பதில் தரவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, பனையூரில் உள்ள துக்கையாண்டி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.