சென்னை: மாநில உரிமைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கொருக்குப்பேட்டையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: விவசாய மசோதாவை எதிர்கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்க்கின்றனர். பாஜவை சேர்ந்த விவசாய அமைப்புகள்கூட எதிர்க்கின்றன. சிமென்ட் விலையை அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு சொன்னது.