சென்னை, :இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா சிலைக்கு, சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசி, செருப்பு மாலை போட்டு அவதித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் - ஒழுங்கை காக்க, பராமரிக்க வேண்டிய காவல் துறை இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டுவதும் இந்த இழி செயல்கள் தொடருவதற்கு காரணம் என குற்றம் சாட்டுகிறோம்.