திருவனந்தபுரம்: கேரளாவில் அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று இம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கேரளாவில் ஊரடங்கின்போது முழுமையாக மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் 7 மாதங்களுக்கு பிறகு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களின்படி மீண்டும் திறக்கப்படுகிறது. இதில், பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் படிப்படியான தளர்வுகள் வழிகாட்டுதலை தொடர்ந்து, கேரளாவில் தற்போது தனியார் ஓட்டல்களும் ரிசார்ட்டுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கின்றன.