லடாக்: இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வகையில் இந்திய இராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு படைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. லடாக்கில் கடல்மட்டத்திலிருந்து 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மைனஸ் 40 டிகிரியில் கடும் குளிர் நிலவுகிறது. அங்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் படைகளை குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடும் பனியிலும் சிறப்பாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன.