கன்னியாகுமரி: கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளை இயக்கி வருகிறது. சீசன் காலங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வரும்போது, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க கூடுதலாக 2 படகுகள் வாங்க பூம்புகார் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. அதில் ஒரு படகு கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டது.