சென்னை: தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு ேதவையான மின்சாரம் அனல், காற்றாலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உற்பத்தி செய்து, துணை மின் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும். இங்கு, மின்சாரத்தின் அழுத்தம் குறைக்கப்பட்டு இணைப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த துணை மின் நிலையங்களை புதிய தொழில்நுட்பங்களால் மேம்படுத்தும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் வியாசர்பாடி துணை மின் நிலையத்தை ரிமோட் முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.