கலப்பு திருமணம் செய்ததால் வாலிபரை கடத்தி மொட்டையடித்த தாய் உள்பட 6 பேர் சிறையிலடைப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ்.  இவரது மகன் அருள்குமார் (25). இவரும் ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்தனர்.  இதில், அப்பெண் கர்ப்பமான நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பள்ளிபாளையம் அடுத்த எஸ்பிபி காலனியில் தனியாக வசித்து வந்தனர். தற்போது அப்பெண் 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த அருள்குமாரின் தாய் அபிலா மற்றும் உறவினர்கள், அருள்குமாரை காரில் கடத்தி வந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவருக்கு மொட்டையடித்துள்ளனர்.

இதுகுறித்து அருள்குமார் மற்றும் அவரது மனைவி வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அருள்குமாரின் தாய் அபிலா உள்பட 6 பேரை கைது செய்து ஆத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், அருள்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: