சென்னை: தமிழக வனத்துறையில் 158 தொழில் பழகுனர் (அப்ரன்டிஸ்) பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் கடந்த 2018 ஜூலை 4ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், வனத்துறை அப்ரன்டிஸ் பணிக்கு வனவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இல்லாத பட்சத்தில் தமிழ் வழியில் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வனவியல் படிப்பு தமிழ் மீடியத்தில் இல்லை. இதையடுத்து, தங்களுக்கு பணிக்கான வாய்ப்பு தருமாறு உத்தரவிடக்கோரி ஜீவனா, ஆனந்தன், கலாவதி உள்ளிட்ட 9 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 9 பேரும் மேல் முறையீடு செய்தனர்.