சென்னை: திருவல்லிக்கேணி ராகவன் தோட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பைப்லைன் உடைப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. இதுபற்றி 9வது அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தபோது, இது எங்களுடைய கட்டுப்பாட்டில் வராது. எனவே, மெட்ரோ குடிநீர் வாரிய உதவி பொறியாளரை தொடர்புகொண்டு புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி மெட்ரோ குடிநீர் வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தபோது, எதிர் முனையில் பேசிய பெண் அதிகாரி, அப்படியா பார்க்கலாம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் நோய் தொற்று அச்சத்தில் உள்ளனர்.