சென்னை: பி.இ., பி.டெட்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28ம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்விற்காக ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.