சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி.யின் மறைவு திரைத்துறைக்கும், கலை உலகிற்கும், தனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என கூறினார்.