ஊட்டி : ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் கான்வெக்ஸ் கண்ணாடி தடுப்புகளில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. பொருளாதார ரீதியான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்படும் நிலையில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தடுப்பூசி பயன்பாட்டு வரும் வரை கொரோனாவில் இருந்து காத்து கொள்ள கட்டாயம் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கட்டாயம் கை கழுவுவது போன்ற வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பும், மத்திய, மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.