குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது: குஜராத் முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மூடப்படுவது வருத்தமளிக்கிறது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன் என கூறினார். தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்க தயார் எனவும் கூறினார்.

Related Stories: