வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், புதுவை, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: