நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.1,624 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை!!

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ. 520 குறைந்துள்ளது. தங்கம் விலை கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் விலை 43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமான போக்கு காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராம் 4,915க்கும், சவரன் 39,320க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், சவரனுக்கு 520 குறைந்து ஒரு சவரன் 38,800க்கு விற்கப்பட்டது.3வது நாளான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுன் ரூ.864 அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு பவுன் ரூ.38,480 ஆக குறைந்தது. ஆனால் மாலையில் ஒரு கிராமுக்கு ரூ.4820ஆக அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,560 ஆக இருந்தது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.

4வது நாளான இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.65 குறைந்து ரூ.4,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 காசு குறைந்து ரூ.60.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களாக சவரனுக்கு ரூ.1624 குறைந்திருப்பது நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: