சென்னை,:மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு விவசாய சட்ட நகலை எரித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் விவசாய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தும் போராட்டங்களும் அறிவித்துள்ளது.இதனிடையே விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை இன்று முற்றுகை போராட்டம் நடத்தி விவசாய சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்தார்.