கன்னியாகுமரி: அரபிக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 11 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையிலிருந்து 11 மீனவர்கள் கடந்த 14ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நேற்று முன்தினம் படகின் இன்ஜின் பழுதடைந்துள்ளது. இதனால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், படகானது திசைமாறி மும்பை கடற்பகுதிக்கு சென்றது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக கடலில் மீனவர்கள் தத்தளிக்கும் தகவலறிந்த இந்திய கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கின.