சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையத்தில்கூட மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. கடந்த 2016ல் மத்திய நகர்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
ஆனால், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்திற்கு முரணாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 2017ல் தணிக்கை நடத்தி சட்ட விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை.