சென்னை: தமிழக பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்து ஓடைபோல் காட்சி அளிக்கிறது. மேலும், புதர்கள் மண்டி இருப்பதால் தண்ணீர் செல்வதில் தடைபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறது. இந்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு தமிழகத்திற்கு கடந்த 18ம் தேதி தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் 3 நாட்களில் தமிழகத்திற்கு வந்தடைந்தது. எனினும் ஆந்திர மாநில பகுதிகளான வரதயபாளையம், கடூர், சின்ன பாண்டூர், சத்தியவேடு, ஜீரோ பாயின்ட் நுழைவாயில் போன்ற பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் புதர்கள் மண்டி கிடக்கிறது.