சென்னை: நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாக்களை அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் ஆதரித்தார். ஆனால் இந்த மசோதாவை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எதிர்த்து பேசினார். எனினும் விவசாய மசோதாவை வாக்கெடுப்பின் போது அவர் ஆதரித்தார். அதிமுகவின் இந்த இரட்டை நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநிலங்களவை அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: இது இரட்டை நிலைபாடு இல்லை. அதாவது குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது மசோதாவில் தெளிவாக இல்லை. அதுபற்றி நான் கேள்வி கேட்டேன். குறைந்தபட்ச ஆதார விலையை நாங்கள் கொடுப்போம் என்றனர். அவ்வளவு தான். நான் பேசியதற்கு முதல்வர் என்னிடம் விளக்கம் கேட்க உள்ளதாக அவர் பேட்டி அளித்திருப்பதாக என்னிடம் கேட்கிறீர்கள்.