சென்னை: விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவின் சிலை மனிதனைப் பற்றிய தவறான தகவலுக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், உலகப் புகழ் விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவில் மக்களை மகிழ்விப்பதற்காக நிற்கும் சிலை மனிதன் மக்கள் மத்தியில் பிரபலமானவர். கொரோனா ஊரடங்கால், இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் வியாபாரம் முடங்கி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் எங்கள் விஜிபி சிலை மனிதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக பொய்ப்பிரச்சாரம் பரப்பி வருவது மனம் வருந்தச் செய்யும் செய்தியாகும்.