டெல்லி: உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு சிலர் தன்னை மிரட்டியதாக வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறையினர் என்ற பெயரில் சிலர் அத்துமீறி நுழைந்ததாகவும், கதிர் ஆனந்த் புகார் அளித்துள்ளார். மக்களவை அவை கூடியதும் மக்களவை புதிய உறுப்பினரான கதிர் ஆனந்த் சபாநாயக்கரிடம் பரபரப்பான புகார் ஒன்றினை அளித்தார். இன்று உளவுத்துறையை சேர்ந்தவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட சிலர், தன்னை மிரட்டியதாகவும், திராவிட முன்னேற்ற கழகம் நாடாளுமன்றத்திலேயே என்ன நிலைப்பாடுகளை எடுக்கப்போகிறது, எந்தெந்த விவகாரங்கள் குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது என்பது பற்றி தன்னிடம் கேள்வி கேட்க முயற்சி செய்ததாகவும் அவர் புகார் அளித்திருக்கிறார். தமிழத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் என்ன என்றும் தன்னிடம் அவர்கள் விசாரிக்க முற்பட்டதாகவும் அந்த புகாரில் எம்.பி. கதிர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.