தொற்று பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியது.  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில் கடந்த 24 மணி நேரத்தில், 86 ஆயிரத்து 961 பேருக்கு புதிதாக  நோய் தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 87,580 ஆக அதிகரித்துள்ளது. இதே போல், ஒரே நாளில் 1,130 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 80.12 ஆக உள்ளது. தற்போது 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 பேர் என சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய மருத்துவ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி இதுவரை நாடு முழுவதும் 6 கோடியே 43 லட்சத்து 92,594 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: