சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.47 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 80,672 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,344 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 982 பேர், செங்கல்பட்டில் 219 பேர், திருவள்ளூரில் 212 பேர், காஞ்சிபுரத்தில் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 959 ஆண்கள், 2 லட்சத்து 17 ஆயிரத்து 348 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.