திருத்தணி: திருத்தணி பகுதியில் தமிழக சுகாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்கள், செவிலியர்கள் முழு கவச உடை அணிந்து பணியாற்றும்போது ஏற்படும் சிரமங்களை உணர்ந்து தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.